அடிக்கடி வரும் உடல்நலப் பிரச்சனை, டாக்டர் கூறியதை கேட்டு ஷாக்கான ஆனந்தி.. சிங்கப்பெண்ணே சீரியல் புரொமோ
சன் தொலைக்காட்சியில் பெண்களை மையப்படுத்தி நிறைய தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
அப்படி கிராமத்தில் இருந்து தனது குடும்ப சூழ்நிலையால் பணம் சம்பாதிக்க சென்னை வந்த பெண்ணின் வாழ்க்கை போராட்டங்களை காட்டும் வண்ணம் ஒளிபரப்பாகி வருகிறது சிங்கப்பெண்ணே.
கடந்த சில வாரங்களாக ஆனந்தி-அன்பு-மகேஷ் முக்கோண காதல் கதையின் கதைக்களம் பரபரப்பின் உச்சமாக ஒளிபரப்பானது, எப்படியோ யார் யாரை காதலிக்கிறார்கள் என்பது வெளியானது.
புரொமோ
தற்போது அடுத்து இன்னொரு விறுவிறுப்பான கதைக்களம் அமைந்துவிட்டதாக தெரிகிறது. அதாவது அடிக்கடி வாந்தி எடுத்துக்கொண்டும், மயக்கம் அடைந்து வரும் ஆனந்தி மருத்துவமனையில் சேர்க்கப்படுகிறார்.
அவருக்கு சில டெஸ்ட் எடுத்த மருத்துவர்கள் அவருக்கு என்ன ஆனது என்பதை கூறுகிறார்கள், அதைக்கேட்டு ஆனந்தி செம ஷாக் ஆகிறார்.
அப்படி என்ன டாக்டர் கூறினார், என்ன பிரச்சனை என்பதை இன்றைய எபிசோடில் காண்போம்.

நான்கு நாட்டவர்கள்... மொத்தம் 532,000 புலம்பெயர்ந்தோருக்கு கடைசி எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப் News Lankasri
