மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு ICUவில் இருக்கும் பாடகி பாம்பே ஜெயஸ்ரீயின் தற்போதைய நிலை என்ன?
பாம்பே ஜெயஸ்ரீ
தமிழ் சினிமாவில் பல சூப்பர் ஹிட் மெலோடி பாடல்களை பாடியிருப்பவர் பாம்பே ஜெயஸ்ரீ. மின்னலே படத்தில் இடம்பெற்ற வசீகரா பாடல் இப்போதும் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாகி இருக்கிறது.
தமிழ் மட்டுமில்லாது தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் என பல மொழிகளில் இதுவரை 200க்கும் மேற்பட்ட சினிமா பாடல்களை பாடியுள்ளார்.
தற்போதைய நிலை
இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாம்பே ஜெயஸ்ரீ, நேற்று மாலை லிவர் பூல் பல்கலைக்கழகத்தில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்த இருந்தார்.
அதற்குள் உடல்நிலை பாதிப்படைய அவருக்கு மூளையில் ரத்தக் கசிவு ஏற்பட்டு கோமா நிலைக்கு சென்றதாக கூறப்பட்டது.
இந்த நிலையில் பாம்பே ஜெயஸ்ரீ சிகிச்சைக்கு பிறகு தற்போது நலமாக இருப்பதாக அவரது சமூக வலைதளத்தில் அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது.
Bombay Jayashri had a health set back in the United Kingdom and received timely medical interventions.
— Bombay Jayashri (@Bombay_Jayashri) March 25, 2023
She is currently stable and recovering well, she requires rest for a couple of days.
Bombay Jayashri's family requests privacy and your support during this period.
பிரபல ஹிட் சீரியலில் நடித்துள்ள ஆல்யா மானசா-சஞ்சீவின் மகள் ஐலா- வைரலாகும் வீடியோ