மாநாடு படத்தில் நடிக்கவிருந்த மறைந்த பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்.. யாருடைய கதாபாத்திரத்தில் தெரியுமா
சிம்பு நடிப்பில் வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த மாதம் வெளியான படம் மாநாடு.
விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றிபெற்றது.
இப்படத்தில் சிம்புவுடன் இணைந்து எஸ்.ஜே. சூர்யா, கல்யாணி ப்ரியதர்ஷன், எஸ்.ஏ. சந்திரசேகர், YG. மஹேந்திரன் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தார்கள்.
இதில், சிம்பு மற்றும் எஸ்.ஜே. சூர்யா இருவரின் கதாபாத்திரத்தையும் தாண்டி, அனைவராலும் கொண்டாடப்பட்ட கதாபாத்திரம் YG. மஹேந்திரன் நடித்திருந்த கதாபாத்திரம் தான்.
இந்நிலையில் இந்த கதாபாத்திரத்தில் முதன் முதலில் நடிக்கவிருந்தது, மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் தான், நடிக்கவிருந்தாராம்.
இதனை இயக்குனர் வெங்கட் பிரபு, Interview ஒன்றில் வெளிப்படையாக கூறியுள்ளார்.