விஜய்காக பாடியதால் இப்படி செய்வீங்களா.. காட்டமாகப் பேசிய பாடகர் வேல்முருகன்
நடிகர் விஜய்யின் கட்சி நிகழ்ச்சியில் சென்று பாடியபோது பாடகர் வேல்முருகன் உடன் விஜய் இணைந்து நடனம் ஆடி இருந்த வீடியோ வைரல் ஆகி இருந்தது.
அதற்கு பிறகு முருகன் பாடலை அவமதித்துவிட்டார் என வேல்முருகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் காட்டமாக பேசி இருக்கிறார்.

இரண்டு நாள்
பாடுனதுக்கு எல்லாம் கேஸ் போடுவாங்களா என அப்போது நான் நினைத்தேன். சிலர் தங்கள் எண்ணம் போல பேசினார்கள். நான் இரண்டு நாள் அறையை விட்டே வெளியில் வரவில்லை.
பெரிய கச்சேரிக்கு போனால் பாடவே பயமாக இருக்கு. நான் எந்த காட்சியிலும் இல்லை. நான் எல்லாருக்கும் பொதுவானவன்.
ஒருத்தன் நல்லா இருக்க கூடாது, அப்படி இருந்தால் எதாவது செய்யணும் என செய்கிறார்கள். உடன் இருந்த என் பெண் குழந்தை என்று கூட பார்க்காமல் அப்படி பேசுகிறார்கள் என காட்டமாக பேசி இருக்கிறார் வேல்முருகன்.
