சிறகடிக்க ஆசை அடுத்த வார ப்ரோமோ.. ரோகிணி சிக்குவது உறுதி
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி எப்போது தான் சிக்குவார் என ரசிகர்கள் நீண்டகாலமாக கேட்டு வருகிறார்கள். ஆனால் ஒவ்வொரு முறையும் அவர் எப்படியவது தப்பிவிடுவது போல தான் கதை சென்றுகொண்டிருக்கிறது.
தற்போது அடுத்த வார ப்ரோமோ வெளியாகி இருக்கிறது. அதில் ரோகிணி சிக்குவது போன்ற ஒரு நிலை ஏற்பட்டு இருப்பது காட்டப்பட்டு உள்ளது.
அடுத்த வார ப்ரோமோ
மனோஜ் ஒரு பள்ளிக்கு கெஸ்ட் ஆக செல்ல இருக்கிறார். அவரது நண்பர் தான் அழைக்கிறார். அப்போது பள்ளி பெயரை மனோஜ் சொல்ல ரோகிணி ஷாக் ஆகிறார்.
அது கிரிஷ் படிக்கும் பள்ளி, அங்கு அவனை பார்த்துவிட்டால் என்ன ஆகுமோ என ரோகிணி அதிர்ச்சியில் இருக்கிறார்.
இரண்டாவது ப்ரோமோவில் ரோகிணி தனது மகன் கிரிஷ்ஷை பள்ளியை விட்டு வெளியில் அழைத்து வந்து பேசுகிறார்.
கிரிஷ் காரில் ஏறுவதை மீனா பார்த்துவிட்டு பின்னாலேயே ஓடுகிறார். இந்த முறையாவது சிக்குவாரா ரோகிணி? பொறுத்திருந்து பார்க்கலாம்.