முத்துவை அசிங்கப்படுத்திய சீதா.. இப்படி சொல்லிட்டாரே! - சிறகடிக்க ஆசை புது ப்ரோமோ
விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலில் தற்போது சீதாவின் திருமண பிரச்சனை தான் பரபரப்பாக சென்றுகொண்டிருக்கிறது. சீதா - அருண் திருமணத்திற்கு சம்மதிக்க மாட்டேன் என முத்து உறுதியாக இருக்கிறார்.
அதனால் மீனா தற்போது அவர்கள் இருவருக்கும் ரெஜிஸ்டர் மேரேஜ் செய்துவைத்துவிட்டார். அதை முத்துவிடம் முற்றிலுமாக மறைத்துவிட்டார் மீனா.
அசிங்கப்படுத்தும் சீதா
இந்நிலையில் சீதாவுக்கு மாப்பிள்ளை பார்த்து திருமணம் செய்து வைக்க போகிறேன் என முத்து கூறுகிறார். மேலும் எப்படிப்பட்ட மாப்பிள்ளை வேண்டும் என கேட்க, 'கவர்மெண்ட் வேலை செய்யும் மாப்பிள்ளை வேண்டும்' என சீதா சொல்லி இருக்கிறார்.
அதை பற்றி மீனாவிடம் சென்று முத்து சொல்ல, 'அவள் யாரை நினைத்து அப்படி சொல்லி இருக்கிறாள் என யோசிச்சீங்களா.. அருணை நினைத்து தான்' என சொல்கிறார் மீனா.
உடனே முத்து கோபமாக சீதாவிடம் சென்று அது பற்றி கேட்க அவளும் "அருணை நினைத்து தான் சொன்னேன்" என கூற கடும் கோபம் ஆகிறார் முத்து.
ப்ரோமோ இதோ பாருங்க.