விஜயாவிற்கு ஷாக் கொடுத்த ரோஹினி, மனோஜ் செய்யப்போவது என்ன... சிறகடிக்க ஆசை புரொமோ
சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் அம்மாவே தனது மகனை வெறுக்கும் ஒரு தொடராக ஒளிபரப்பாகி வருகிறது சிறகடிக்க ஆசை சீரியல்.
கதையில் இப்போது கிடைக்குமா கிடைக்காதா என இருந்த அண்ணாமலையின் வீடு இப்போது பெரிய போராட்டத்திற்கு பிறகு அவர் கையில் கிடைத்துவிட்டது. சிந்தாமணியின் பிளானை எல்லாம் சுக்குநூறாக உடைத்துவிட்டார் முத்து.

வீட்டிற்கு வந்தவர்கள் சிறப்பு பூஜை செய்து மீண்டும் வீட்டிற்கு வந்த சந்தோஷத்தை கொண்டாடினார்கள். அடுத்து மனோஜ், ரோஹினியிடம் விஜயாவை மன்னிப்பு கேட்க சொன்ன காட்சிகள் கடைசி எபிசோடில் இடம்பெற்றன.

புரொமோ
இப்போது கதையில் அடுத்து விஜயா-ரோஹினி சண்டை நடக்கும் என தெரிகிறது. ரோஹினி மனோஜை ஷோரூமில் சந்தித்து ஒரு நிகழ்ச்சி நடக்கிறது, அதற்கு நீ வந்தால் உன் தொழிலுக்கு நல்ல உதவியாக இருக்கும் என்கிறார்.

அதற்கு செல்லலாம் என மனோஜ் கிளம்ப அந்த நேரம் விஜயா வந்து சிறந்த தாய்-மகன் நிகழ்ச்சி நடக்கிறது அதற்கு நாம் செல்லலாம் என்கிறார். மனோஜ் அம்மாவை பேச்சை தட்டமுடியாமல் அவருடன் செல்ல அதே நிகழ்ச்சிக்காக ரோஹினி உள்ளார்.
அங்கு மனோஜை ரோஹினி வா செல்லலாம் என அழைக்க விஜயா ஷாக் ஆகி கோபம் அடைகிறார்.
ரூ.6000 சம்பளம் பெற்ற உதவி பொறியாளர்: பல கோடிகளில் சொத்து குவித்தது எப்படி? விசாரணை தீவிரம் News Lankasri
விசிகவில் அதிரடி நடவடிக்கை: சங்கத்தமிழன் 3 மாதங்கள் நீக்கம்! விளக்கம் அளித்த திருமாவளவன் IBC Tamilnadu