விஜயா ஆரத்தி எடுக்க வீட்டிற்கு வந்த ரோஹினி, அடுத்து நடந்தது?... சிறகடிக்க ஆசை புரொமோ
சிறகடிக்க ஆசை
விவாகரத்து கிடைக்குமா இல்லையா என இழுத்துக் கொண்டிருந்த மனோஜ்-ரோஹினி பிரச்சனை முடிவுக்கு வந்துவிட்டது.
மனோஜை விவாகரத்து செய்ய ஒப்புக்கொள்கிறேன் என கையெழுத்து போட்டு நீதிமன்றத்தில் தனக்கு சாதகமாக வழக்கை திருப்பிக்கொண்டார் ரோஹினி.

கர்ப்பமாக இருக்கும் ஆதாரத்தை நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததால் நீதிமன்றம் மனோஜ் தான் ரோஹினி குழந்தையின் அப்பா, அதனால் அவருக்கான எல்லா செலவுகளையும் மனோஜ் தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார்.
நீதிமன்ற உத்தரவை கேட்டதில் இருந்து விஜயா செம கோபம் அடைகிறார், ரோஹினி தனது வீட்டிற்கு வரக்கூடாது என கூற பின் நீதிமன்ற உத்தரவை மீற முடியாது என அனைவரும் கூறுகிறார்கள்.

புரொமோ
தற்போது சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து வரப்போகும் கதைக்களத்தின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது. அதில் ரோஹினி மனோஜிடம், முதன்முறையாக திருமணம் ஆகி எப்படி சென்றோமோ அப்படியே இப்போது இருவரும் வீட்டிற்கு செல்வோம் என்கிறார்.

இருவரும் வீட்டிற்கு ஜோடியாக செல்ல விஜயா செம கோபமடைகிறார், அவரது மாமியார் ஆரத்தி எடு என கூறியதை மறுக்க முடியாமல் இருவருக்கும் ஆரத்தி எடுக்கிறார்.
மீனா இதை வெளியே கொட்டு நமக்கு வேண்டாதது எல்லாம் வீட்டிற்கு வந்துவிட்டது என்கிறார். இதோ புரொமோ,