சிறகடிக்க ஆசை அடுத்த வார ப்ரோமோ.. திருந்தாத விஜயா இப்போதும் என்ன நினைக்கிறார் பாருங்க
விஜய் டிவியின் முன்னணி சீரியல் ஆக இருந்து வருகிறது சிறகடிக்க ஆசை. தற்போது மீனாவை வெளியில் அனுப்பிவிட்ட நிலையில் வீட்டில் யாரும் இல்லாததால் தனிமையை உணர்கிறார்.
உடன் யாரும் இல்லை என்றால் எப்படி இருக்கும் என தற்போது தான் அவருக்கு தெரிகிறது. நேராக பார்வதி வீட்டுக்கு சென்று தான் நேற்று இரவு தனிமையை உணர்ந்ததாக சொல்கிறார்.
அதற்கு காரணமே நீதானே என அவரை திருப்பி குத்தி காட்டுகிறார் பார்வதி.

அடுத்த வார ப்ரோமோ
உன் கஷ்டம் இப்போது தான் புரிகிறது. என்னால் ஒரு நாள் கூட வீட்டில் தனியாக இருக்க முடியவில்லையே, நீ எப்படி இத்தனை வருடம் தனியாக இருக்கிறாய் என பார்வதியிடம் புலம்புகிறார் விஜயா.
இந்த நிலையிலும் விஜயா மீனா பற்றி கொஞ்சமும் யோசிக்காமல் தன்னை பற்றி மட்டுமே யோசிப்பதாக சீரியல் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
"விஜயாவுக்கு சமைக்க வேலை பார்க்க ஆள் இல்லைன்னு ரொம்ப கவலை வந்துட்டு" என நெட்டிசன்கள் ப்ரோமோ பார்த்துவிட்டு கலாய்த்து இருக்கிறார்கள்.