ரோகினி திட்டம் சக்சஸ், விஜயாவுக்கு உச்சகட்ட அதிர்ச்சி.. சிறகடிக்க ஆசை அடுத்த வார ப்ரோமோ
விஜய் டிவியின் சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகிணி பணக்கார வீட்டு பெண் இல்லை என்ற உண்மை தெரியவந்துவிட்டதால் மாமியார் விஜயா ஒரு திட்டம் போடுகிறார். ரோகிணியை மனோஜிடம் இருந்து பிரிக்க சாமியாரை பார்த்து ஒரு தாயத்து வாங்கி வருகிறார்.
அதே போல ரோகிணியும் அதே சாமியாரை பார்த்து 'என் புருஷனை அவர் அம்மாவிடம் இருந்து பிரிக்க வேண்டும்" என கேட்டு தயாத்து வாங்கி வருகிறார்.
அடுத்த வார ப்ரோமோ
இந்நிலையில் தற்போது அடுத்த வார ப்ரோமோவில் மனோஜ் தனது அறையில் சூடாக இருக்கு அயன் பாக்ஸ் மீது கை வைத்துவிட கை சுட்டதால் கத்தி கதறுகிறார்.
அப்போது உள்ளே செல்லும் அம்மா விஜயா உடனே ரோகிணியை திட்டுகிறார். "இப்படியே அயன் பாக்ஸை அப்படியே சூடாக வைத்து விட்டு போவியா. துப்பு கெட்டவளை என் புள்ளைக்கு கல்யாணம் பண்ணி வெச்சி அவன் வாழ்க்கையை நானே கெடுத்துட்டேன்" என சொல்கிறார்.
அதற்கு மனோஜ் "எதுக்கு இங்க வந்து கத்திட்டு இருக்க, வெளியே போ மொதல்ல” என சொல்லி விஜயாவை அசிங்கப்படுத்தி விடுகிறார்.