சந்தோஷ செய்தி சொன்ன மீனா, ஆத்திரத்தில் விஜயா செய்த மோசமான காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட்
சிறகடிக்க ஆசை
கதையில் கடைசியாக, ரோஹினிக்கு சாதகமாக மாதர் சங்கம் இருப்பதால் அவரிடம் எல்லா உண்மையையும் கூற வேண்டும் என மனோஜை, முத்து-மீனா அழைத்து செல்கிறார்கள்.
அங்கு மனோஜ், அந்த அதிகாரியிடம், ரோஹினியை விரும்பி தான் திருமணம் செய்துகொண்டேன், ஆனால் அவள் என்னிடம் நிறைய பொய் கூறி ஏமாற்றிவிட்டார். முதல் திருமணம் நடந்து ஒரு குழந்தை கூட உள்ளது.
இந்த உண்மையை மறைக்க அதற்காக நிறைய விஷயங்களையும் செய்துள்ளார் என கூற அந்த அதிகாரி ரோஹினி மீது கடும் கோபமாகிறார். அதோடு ரோஹினிக்கு இனி ஆதரவு தர மாட்டேன் என்கிறார்.

எபிசோட்
இன்றைய எபிசோடில், சிந்தாமணி-மீனாவிற்கான காட்சிகள் தான் இடம்பெற்றுள்ளன. அதாவது பூ சங்க வியாபாரிகள் தேர்தல் நடக்க உள்ளதாம், அதற்கு இந்த முறை சிந்தாமணியே நிற்க முடிவு செய்துள்ளார், அவரது ஆதரவாளர்கள் எல்லோரும் சிந்தாமணி தான் வெற்றிப்பெறுவார் என சந்தோஷம் அடைகிறார்கள்.

அந்த நேரத்தில் இந்த தேர்தலில் மீனா நிற்கிறார் என்ற செய்தி சிந்தாமணி காதில் விழ அவர் ஒரு பிளான் போடுகிறார்.
அதாவது, அவர் விஜயாவை நேரில் சந்தித்து அவரை குழப்பி விடுகிறார். உங்கள் வீட்டில் ஒரு தலைவி வரப்போகிறார் மீனா தேர்தலில் நிற்கப்போகிறார் சந்தோஷம். ஆனால் அவள் ஜெயித்தால் உங்கள் கை இறங்கிவிடும், வீட்டில் அவள் கை ஓங்கிவிடும் என விஜயாவை ஏற்றி விடுகிறார்.

இடையில் மீனா தனது அம்மா, தங்கை, தம்பியிடம் இந்த விஷயம் கூறி சந்தோஷப்படுகிறார். அங்கு இருந்த சிந்தாமணி மகள் ரேகா, தேர்தல் என்றால் நிறைய பிரச்சனைகளையும் சமாளிக்க வேண்டும் எதிரி சும்மா இருக்க மாட்டார் என தனது அம்மாவை மனதில் வைத்து எச்சரிக்கிறார்.

நாளைய எபிசோடின் புரொமோவில், மீனா-முத்து இந்த விஷயத்தை வீட்டில் கூற அனைவரும் சந்தோஷப்படுகிறார்கள். வீட்டிற்கு வந்த விஜயாவிடம் மீனா கூறி ஸ்வீட் கொடுக்க அதை அவர் தட்டி விடுகிறார்.

You May Like This Video