போலீசாரால் விஜயாவிற்கு ஏற்பட்ட கொடுமை, பதற்றத்தில் மனோஜ்... சிறகடிக்க ஆசை பரபரப்பு எபிசோட்
சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் இப்போது சீரியல்களில் வலம் வரும் டிரெண்ட் விவாகரத்து மற்றும் பிரிந்து இருப்பது தான்.
எல்லா சீரியல்களிலும் முக்கிய ஜோடியாக பார்க்கப்படுபவர்கள் எல்லாம் கதையில் இப்போது பிரிந்து உள்ளார்கள்.

சிறகடிக்க ஆசை விவாகரத்து, பாண்டியன் ஸ்டோர்ஸ் விவாகரத்து, சின்ன மருமகள் பிரிந்துவிட்டனர், அன்புடன் கண்மணி பிரிந்துவிட்டனர், மகாநதி பிரிந்துவிட்டனர், சிந்து பைரவி பிரிந்து உள்ளனர், இப்படியே எல்லா கதைக்களமும் உள்ளது.

சரி நாம் சிறகடிக்க ஆசை சீரியலில் இன்றைய எபிசோடில் என்ன நடந்தது என்ற விஷயத்தை காண்போம்.
எபிசோட்
மனோஜ், மகளிர் சங்க அதிகாரியிடம் வந்து பேச வேண்டும் என்பதற்காக தனது புதிய தங்கையை வைத்து முத்து ஒரு பிளான் போட்டிருப்பதாக தெரிகிறது.
அவர் வீட்டிற்கு வந்து மாதர் சங்கம் பற்றி விசாரித்ததில் அவர்கள் பெண்கள் சொல்லும் குற்றச்சாட்டுகளை தான் முதலில் ஏற்பார்களாம். அவர்களுக்கு நியாயம் வழங்க முதலில் பேசிப்பார்ப்பார்கள் அடுத்து வீட்டிற்கு எதிரே போராட்டம் நடத்துவது, அவர்கள் பணிபுரியும் இடத்தில் போராட்டம் செய்வார்கள்.

பிறகு இந்த போராட்ட பிரச்சனையை மீடியாவிற்கு தெரிவிப்பது, பிறகு சம்பந்தப்பட்ட பெண்ணின் கணவர் மற்றும் மாமியாரை கைது செய்வார்களாம் என கூறி மனோஜை பயமுறுத்துகிறார்.
அவர் சொன்னதை நினைத்து பார்க்கிறார் மனோஜ், ரோஹினி வீட்டின் முன் சில பெண்களுடன் போராட்டம் செய்ய வீட்டிற்கு வந்து போலீசார் விஜயாவை கைது செய்வது போல் நினைத்து பார்க்கிறார்.

பின் முத்து-மீனா எழுதி கொடுத்தது போல் மாதர் சங்க அதிகாரியிடம் கூறுகிறார், அவரும் ரோஹினி ஏமாற்றிய விஷயங்களை அறிந்து கோபப்படுகிறார். அந்த நேரம் ரோஹினி அங்கு வர அவரை அந்த அதிகாரி செமயாக திட்டி அனுப்பிவிடுகிறார்.