சிறகடிக்க ஆசை சீரியல் : சதி வலையில் சிக்கிய முத்து! வீட்டை விட்டு வெளியேறிய சோகம்..

By Kathick May 05, 2024 08:27 AM GMT
Report

சதி வலையில் சிக்கிய முத்து

சின்னத்திரையில் பட்டையை கிளப்பி கொண்டிருக்கும் சிறகடிக்க ஆசை சீரியலில் சிட்டியின் சதி வலையில் கதாநாயகன் முத்து சிக்கிவிட்டார். இதனால் ஊர் முழுவதும் முத்துவை குடித்துவிட்டு சார் ஓட்டும் நபராக பார்க்க துவங்கிவிட்டனர்.

சிறகடிக்க ஆசை சீரியல் : சதி வலையில் சிக்கிய முத்து! வீட்டை விட்டு வெளியேறிய சோகம்.. | Siragadikka Aasai Serial Coming Weak New Promo

ஒரு தப்பும் செய்யாத முத்துவை அவருடைய தந்தை அண்ணாமலை அடித்துவிடுகிறார். இதுவரை எந்த ஒரு விஷயத்திற்கும் முத்து மீது கோவப்படாத அண்ணாமலை, முதல் முறையாக முத்துவை அடித்தது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதிய ப்ரோமோ

இந்த நிலையில், விஜயா எதிர்பார்த்தது போல் மீனாவும், முத்துவும் வீட்டை விட்டு வெளியேறிவிட்டனர். பின் போலீஸ் இடம் சென்று தனது காரை கேட்கிறார் முத்து. ஆனால், போலீஸ் முத்துவின் லைசன்ஸை ரத்து செய்ய போவதாக கூறியவுடன் முத்து அதிர்ச்சியடைகிறார்.

சிறகடிக்க ஆசை சீரியல் : சதி வலையில் சிக்கிய முத்து! வீட்டை விட்டு வெளியேறிய சோகம்.. | Siragadikka Aasai Serial Coming Weak New Promo

நான் எந்த தப்பும் செய்யவில்லை என்று கூறிய பிறகும் கூட, போய் டீ வாங்கிட்டு வா என போலீஸ் கூற, வேறு வழி இல்லாமல், போலிஸுக்கு டீ வாங்கி கொடுக்கிறார் முத்து. இந்த சதி வலையில் இருந்து முத்து எப்படி தப்பிக்க போகிறார் என பொறுத்திருந்து பார்ப்போம்.

ப்ரோமோ வீடியோ :



+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US