மீனாவால் அண்ணாமலை உயிருக்கு ஆபத்து.. விஜயாவின் சதியா இது! சிறகடிக்க ஆசை சீரியல் புரோமோ வீடியோ
சிறகடிக்க ஆசை
கடந்த வாரம் சிறகடிக்க ஆசை சீரியலில், பார்வதி வீட்டிற்கு சென்ற விஜயாவை சந்திக்க அங்கு சிந்தாமணி எனக்கு ஒருவரை தெரியும், அவர் நடப்பது, நடக்கப்போவது என்ன எல்லா விஷயத்தையும் கூறிவிடுவார் என சாமியார் ஒருவரைப்பற்றி விஜயாவிடம் சிந்தாமணி கூறியிருந்தார்.

அதன்படி, அந்த சாமியாரை வீட்டிற்கு அழைத்து பூஜை செய்கிறார் விஜயா. அதற்கான ஏற்பாடுகளை வீட்டில் மீனாவை வைத்து விஜயா செய்து வர, எதற்காக இந்த ஏற்பாடு என அண்ணாமலை கேட்கிறார். அந்த நேரத்தில் சாமியார் அங்கு வந்துவிடுகிறார்.

மீனாவால் ஆபத்து
பூஜை தொடங்க, இந்த வீட்டின் இரண்டாவது மருமகள் மீனாவால், விஜயாவின் கணவர் அண்ணாமலையின் உயிருக்கு ஆபத்து இருக்கிறது. மீனா இந்த வீட்டில் இருக்கவே கூடாது என அந்த சாமியார் கூறுகிறார். சாமியார் மீனாவை பற்றி கூற, முத்து கடும் கோபத்துடன் நிற்கிறார்.

ஆனால், மறுபக்கம் தன்னால் தனது மாமனாருக்கு ஏதாவது ஆகிவிடுமோ என சாமியார் சொன்னதை கேட்டு கண்ணீருடன் நிற்கிறார். சாமியார் சொல்வது எல்லாமும் உண்மையா அல்லது விஜயாவும் சிந்தாமணியும் சேர்ந்து இப்படியொரு சதியை செய்துள்ளார்களா என சந்தேகமும் எழுந்துள்ளது.

விஜயாவிற்கு தெரியாமல் கூட சிந்தாமணி இப்படி செய்திருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. ஏனென்றால், மீனாவை பழிவாங்க வேண்டும் என பல முயற்சிகளை கையில் எடுத்த சிந்தாமணிக்கு இதை செய்யமாட்டாரா என்ன? பொறுத்திருந்து பார்ப்போம் அடுத்து சிறகடிக்க ஆசை சீரியலில் என்ன நடக்கப்போகிறது என்று.