ரோஹினி செய்த காரியம், செருப்பால் அடிக்க சென்ற விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட்
சிறகடிக்க ஆசை
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் விவாகரத்து கதைக்களம் தான் பெரியதாக சென்று கொண்டிருக்கிறது.
ரோஹினியிடம் இருந்து மனோஜிற்கு விவாகரத்து வாங்கியே ஆக வேண்டும் என ஒரு முடிவோடு இருக்கிறார்.

எபிசோட்
இன்றைய எபிசோடில், முத்து-மீனா இருவரும் மனோஜிற்காக குடும்ப நல நீதிமன்றம் வருகின்றனர்.
அப்போது ரோஹினியும் அங்கு கஷ்டத்தில் இருக்கும் பெண் போல் எந்த ஒரு மேக்கப்பும் இல்லாமல் வருகிறார். அதைப்பார்த்த மீனா, உள்ளே இருப்பவர்களை ஏமாற்ற இப்படியொரு கெட்டப்பில் வந்துள்ளார் என்கிறார்.

கவுன்சலிங் சென்ற ரோஹினி அவர்கள் முன்பு கதறி கதறி அழுது, மனோஜ் காலில் விழுந்து நடித்து இருப்பவர்களை ஏமாற்றுகிறார்.
பின் வெளியே வந்த மனோஜ், ரோஹினி நன்றாக ஏமாற்றி அழுது புலம்பிவிட்டார், என்னை பேசவே விடவில்லை என்கிறார். வெளியே வந்த ரோஹினியிடம் விஜயா கோபமாக பேச அவரும் நக்கலாக பதில் கொடுக்கிறார்.

இதனால் கோபத்தில் விஜயா செருப்பை கழட்ட முயற்சிக்கு முத்து இது நீதிமன்றம் என கூறி சமாதானப்படுத்துகிறார்.