மீண்டும் ஒரு முட்டாள் தனமான வேலையை செய்த மனோஜ், செமயாக அடித்த விஜயா... சிறகடிக்க ஆசை சீரியல்
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை, கடந்த சில வாரங்களுக்கு முன் ஆரம்பித்தது பிரச்சனை இப்போது வரை தொடர்ந்து கதையில் பிரச்சனைகளாகவே உள்ளது.
முதலில் ரோஹினி திருமணம் ஆகி மறைத்த விஷயம் அண்ணாமலை குடும்பத்திற்கு தெரியவர அப்போது இருந்தே கதையில் அதிரடி விஷயங்கள் நடக்கிறது.

இப்போது ரோஹினி பொய் சொல்லி திருமணம் செய்தார் என்பதை நிரூபிக்க வித்யா மற்றும் மணியை சாட்சியாக நீதிமன்றத்தில் நிறுத்தினால் மிகவும் கிரிமினலாக யோசித்து ரோஹினி இரு சாட்சியையும் ஒன்றுமே இல்லாதது போல் ஆக்கிவிட்டார்.
மணிக்கு மனோஜ் போனில் இருந்து ரோஹினி பணம் அனுப்ப அதை மனோஜ் தான் அனுப்பினார் என கூறி சாட்சியாக வந்த மணியை காலி செய்தார்.

இன்றைய எபிசோட்
நீதிமன்றத்தில் இருந்து வீட்டிற்கு வந்த விஜயா மனோஜிடம் இன்னும் எப்படி அவளை நம்புகிறாய், உன்னை ஏமாற்றுகிறாள் என கூறி கோபமடைகிறார். தொழிலும் வேண்டும், விவாகரத்தும் வேண்டும் என்றால் கண்டிப்பாக விவாகரத்து கிடைக்காது என முத்து கூறுகிறார்.

இதனால் விஜயா, ரோஹினி இனி கடைக்கு வரக்கூடாது, அவள் வாங்கிக்கொடுத்த ஆர்டர் வேண்டாம் கடனை எப்படியாவது அடைத்துக் கொள்வோம் என விஜயா கூற மனோஜ் முழிக்கிறார்.

என்ன என்று கேட்டால் அப்போது மனோஜ் ஒரு விஷயம் கூற குடும்பமே ஷாக் ஆகிறார்கள். அதாவது ஆர்டர் வந்ததால் தொழிலுக்காக மனோஜ் பல லட்சம் மீண்டும் கடன் வாங்கியுள்ளாராம், அதைக்கேட்டதும் விஜயா என்ன செய்துள்ளாய் என்று செமயாக அடிக்கிறார்.

பின் இரவு மனோஜ் அறைக்கு சென்ற விஜயா எவ்வளவு கடன் வாங்கினாய் என கேட்க ஒரு 7 லட்சம் வரை இருக்கும் என கூற சிந்தாமணியிடம் சொல்லி வாங்கி தருகிறேன் என்கிறார். இது மற்ற யாருக்கும் தெரிய கூடாது என விஜயா கூறியதை மீனா கேட்டுவிடுகிறார்.
ஜேர்மனியை பிரித்தானியா முதலான நாடுகளுடன் இணைக்கும் புதிய எரிவாயுக்குழாய் திட்டம் துவக்கம் News Lankasri
இந்தியா வீரர்களின் பேட்டில் பூசப்பட்டுள்ள பொருளே அதிரடிக்கு காரணம் - இலங்கை வீரர் குற்றச்சாட்டு News Lankasri