சிந்தாமணியிடம் சிக்கப்போகும் சத்யா, க்ரிஷ் விஷயத்தில் அண்ணாமலை முடிவு... சிறகடிக்க ஆசை எபிசோட்
சிறகடிக்க ஆசை
விஜய் தொலைக்காட்சியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட தொடர் தான் சிறகடிக்க ஆசை.
இடையில் கதையில் பெரிய திருப்பம் இல்லாமல் சாதாரணமாக சென்றது, இப்போது பார்த்தால் அடுத்தடுத்து என்ன நடக்கும் என ரசிகர்கள் எதிர்ப்பார்க்கும் அளவிற்கு கதைக்களம் சூடு பிடிக்க ஓடிக் கொண்டிருக்கிறது.
ரோஹினி என்கிற கல்யாணி பற்றிய உண்மை முதலில் வெளியானது, அதில் இருந்து ஒவ்வொரு பிரச்சனையாக வந்து கொண்டிருக்கிறது ஆனால் எதற்கும் இன்னும் தீர்வு வரவில்லை.
இன்றைய எபிசோட்
இன்றைய எபிசோடில், சத்யா வீட்டிற்கே அவரை தேடி ரேகா வந்துவிடுகிறார். அவரது அம்மா மாடியில் உள்ளான் என கூற ரேகா நேராக மாடிக்கு சென்று சத்யாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கிறார்.
பின் அப்படியே ஜாலியாக பேசிக்கொண்டிருந்தவர் எனக்கு உங்களை பிடித்துள்ளது, நான் உங்களை காதலிக்கிறேன் என கூறுகிறார். இதைக்கேட்டதும் சத்யா ஷாக் ஆகி எதுவும் கூறாமல் நிற்கிறார்.

அடுத்து வீட்டிற்கு வந்த மீனா அண்ணாமலையிடம், ரோஹினியை பார்த்ததும் அவர் க்ரிஷ் குறித்து சொன்னதையும் கூறுகிறார். உடனே அண்ணாமலை நீங்கள் வீட்டிற்கு செல்ல வேண்டாம், ரோஹினி இதை வைத்து ஏதாவது பிளான் செய்யலாம்.

வெளியில் க்ரிஷை வரவழைத்து பார்க்க முடிந்தால் பாருங்கள் என்கிறார்.