பரபரப்பான கதைக்களத்திற்கு இடையில் சிறகடிக்க ஆசை சீரியலில் திடீரென ஏற்பட்ட மாற்றம்...
சிறகடிக்க ஆசை
குடும்பத்தை மையமாக கொண்டு விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.
கதையில் இப்போது சிந்தாமணி, விஜயாவுடன் நட்பாக பழகி அவரது வீட்டை எழுதி வாங்கும் பிளானை போட்டுவிட்டார். அடுத்து மீனா-முத்துவை அந்த வீட்டைவிட்டு துரத்தும் வேலைகளில் சிந்தாமணி இறங்கியுள்ளார்.

மாற்றம்
இன்றைய எபிசோடில், சிந்தாமணி ஏற்பாடு செய்த பெண் அண்ணாமலை வீட்டிற்கு வருகிறார். அவர் பூஜை செய்வது போல் நடித்து சிந்தாமணி சொன்னது போல் மீனா வீட்டில் இருந்தால் உனது தாலிக்கு ஆபத்து என விஜயாவை பார்த்து கூறுகிறார்.

இதைக்கேட்ட விஜயா ஆடிப்போக அந்த பெண்மணி சொன்னது கேட்டு மீனா அழுகிறார்.
ஆனால் அண்ணாமலை, முத்து, ரவி 3 பேரும் அந்த பெண்ணையும் அவர் சொன்னதையும் நம்பவில்லை, ஆனால் விஜயா அவர் சொன்னதை பிடித்துக்கொண்டு மீனாவை வீட்டைவிட்டு வெளியே செல்லுமாறு கூறுகிறார்.

இன்றைய எபிசோடில் அண்ணாமலையின் குரல் மாற்றம் செய்யப்பட்டுள்ளது, ஆனால் அது சரியாக செட் ஆகவில்லை என ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.