ரேகாவை காப்பாற்ற சென்றபோது திடீரென வந்த அவரது அப்பா, அடுத்து நடந்த விஷயம்... சிறகடிக்க ஆசை பரபரப்பு எபிசோட்
சிறகடிக்க ஆசை
வீட்டுப் பிரச்சனையை மிகவும் கஷ்டப்பட்டு முடித்த முத்து-மீனா இப்போது காப்பாற்றும் வேலையில் இறங்கியுள்ளனர்.
அதாவது சிந்தாமணி தனது மகள் ரேகா சத்யாவை காதலிக்கிறார் என்ற விஷயம் தெரிந்ததுமே நேரடியாக மோதாமல் முதலில் தனது கணவரிடம் கூறி ரேகாவை வேறொரு இடத்திற்கு அனுப்பி வைத்தார்.

அங்கே சென்றதும் ரேகாவிற்கு மறைமுகமாக அழுத்தம் கொடுக்க ஆரம்பித்த சிந்தாமணி விஜயா வீட்டை கைப்பற்றும் வேலைகளில் பிஸியாக இருந்தார், ஆனால் எப்படியோ முத்து இது அது என செய்து வீட்டை மீட்டுவிட்டார்.
சத்யாவை பயப்பட வைக்க போலீஸில் பொய் புகார் அளிக்க வைத்தார், அதிலும் முத்து ஜெயிக்க சிந்தாமணி தோற்றார்.
இப்போது ரேகாவை ஹைதராபாத் அனுப்பி வைக்க அந்த விஷயம் சத்யாவிற்கும் தெரிந்துவிட்டது.

எபிசோட்
கடைசி எபிசோடில் முத்து கொடுத்த ஐடியாபடி, ரேகா மயக்கம் வந்தது போல் நடிக்க மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். முத்து ஆம்புலன்ஸ் எடுத்துக்கொண்டு மாஸ்க் அணிந்து மருத்துவமனை சென்று நிறைய டிராமாக்கள் செய்து ரேகாவை பார்த்துவிட்டார்.

ரேகாவை பார்த்துக்கொள்ள போடப்பட்ட அடியாட்களை முத்து மயக்கம் அடைய வைத்துவிட்டு ரேகாவை அழைத்துச் செல்லும் போது அவரது அப்பா வந்துவிடுகிறார்.
அவர் அறைக்கு வந்து ரேகாவை பார்ப்பதற்குள் இங்கே இருந்து கிளம்பிவிட வேண்டும் என முத்து வேகமாக ரேகாவை அழைத்துக்கொண்டு எஸ்கேப் ஆகிவிடுகிறார்.

இப்போது ரேகா-சத்யாவை பாதுகாப்பாக தனது பாட்டி வீட்டில் தங்க வைத்துள்ளார் முத்து. அடுத்து என்ன நடக்கப்போகிறதோ தெரியவில்லை, மகளை காணவில்லை என்பதால் சிந்தாமணி என்ன செய்வாரோ பொறுத்திருந்து காண்போம்.
முதல்வர் விஜய்யை சந்தித்த விஷால்: வித்தியாசமான பரிசால் சமூக வலைதளங்களில் குவியும் பாராட்டு! IBC Tamilnadu
விமான கண்காட்சியில் கவனம் ஈர்த்த எதிர்கால ஆயுதம்: ஐரோப்பா-அமெரிக்கா இணைந்து உருவாக்கும் சக்திவாய்ந்த ட்ரோன் News Lankasri