என் பேச்சை மீறி நடந்தால், முத்து சொன்ன விஷயம் ஷாக்கான மீனா.. சிறகடிக்க ஆசை சீரியல்
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியல் இன்றைய எபிசோடில் முத்து-மீனா சண்டை தான் முக்கியமான விஷயம்.
விஜயா, பார்வதி வீட்டிற்கு சென்று ரோஹினியை விவாகரத்து செய்ய வைத்து மனோஜிற்கு நீதுவை திருமணம் செய்து வைக்க வேண்டும் என பேசுகிறார். வீட்டில் ரோஹினி, மனோஜை வெறுப்பேற்ற செய்யும் விஷயங்களை மறுபடியும் செய்கிறார்.
இன்னொரு பக்கம் முத்து-மீனா இருவரும் சீதா திருமணம் குறித்து பேசுகிறார்கள்.
ஒருவேளை உங்களை மீறி இந்த கல்யாணம் நடந்தால் என்ன செய்வீர்கள் என மீனா கேட்க, முத்து கோபத்தில் அப்படி எல்லாம் யோசிப்பீர்களா, திருமணம் நடந்தால் நடக்கட்டும் நான் என்ன செய்ய முடியும்.
ஆனால் கட் ஆகிவிடும், உன் குடும்பத்திற்கு நமக்குள் உள்ள உறவு இருக்காது. என்னை வெளியே அனுப்பிவிடுவீர்களா என மீனா கேட்க, அப்பா கொண்டு வந்த மருமகள், ஆனால் முத்துவின் பாசம் எதுவும் கிடைக்காது என கோபமாக கூறிவிட்டு செல்கிறார்.
புரொமோ
வீட்டில் நடந்த சண்டையில் முத்து குடித்துவிட்டு வீட்டிற்கு வருகிறார்.
அதனை பார்த்த விஜயா மீண்டும் ஆரம்பித்துவிட்டானா என கூற முத்து தனது அம்மாவை கொஞ்சி பேசுகிறார். அதனை கேட்ட விஜயாவும் எமோஷ்னல் ஆகிறார். இதோ நாளைய எபிசோடிற்கான புரொமோ,

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan
