மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சீதா, அருணை கண்டதும் முத்து செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் புரொமோ
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில் இப்போது ஒரே பிரச்சனையாக உள்ளது.
சீதா காதல் வீட்டில் தெரிந்ததில் இருந்து முத்து-மீனா இடையே கடும் சண்டை நிலவி வருகிறது. இன்றைய எபிசோடில், முத்து குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த தனது அம்மாவை பெருமையாக பேசுகிறார்.
அதாவது தனது அம்மா, அப்பாவின் பேச்சை எப்போதும் மீற மாட்டார் என்கிறார். இது மீனா காதிற்கு விழும் அளவிற்கு மீண்டும் மீண்டும் அதையே பேசுகிறார்.
இன்னொரு பக்கம் மனோஜ்-ரோஹினி பிரச்சனை ஓடிக் கொண்டிருக்கிறது.
புரொமோ
நாளைய எபிசோடிற்கான புரொமோவில், சீதாவை மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர், அவரை பார்க்க முத்து-மீனா சென்றுள்ளனர்.
மருத்துவமனையில் அருண் மற்றும் அவரது அம்மாவை முத்து பார்த்து கோபப்பட இருவருக்கும் வாக்குவாதம் நடக்கிறது. முத்து அருணை அடிக்க செல்வது போல் காண்பிக்கின்றனர், என்ன நடக்கிறது என்பதை பொறுமையாக காண்போம்.

80 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவின் முதல் தங்க சுரங்கம் - ஆண்டுக்கு 750 கிலோ தங்கம் உற்பத்தி News Lankasri
