வீட்டிற்கு வந்த விஜயா மீனாவிற்கு செய்த கேவலமான விஷயம், சிந்தாமணி அடுத்த பிளான்.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட்
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில் கூட இப்போது தேர்தல் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் பிரச்சாரங்கள் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இப்போது சீரியலிலும் தேர்தல் நடக்க உள்ளது. அதாவது சிறகடிக்க ஆசை சீரியலில் பூ சங்க தேர்தல் நடக்க உள்ளது, அதில் மீனா-சிந்தாமணி நேரடியாக மோத உள்ளனர்.
ஆனால் சிந்தாமணி விஜயாவை வைத்து மீனாவை தேர்தலில் நிற்க விடாமல் செய்ய ஒரு பிளான் போட்டார்.

எபிசோட்
சிந்தாமணி ஏற்றிவிட்டதோடு வீட்டிற்கு வந்த விஜயா மீனா கொடுத்த ஸ்வீட்டை தட்டிவிட அண்ணாமலை செமயாக கோபப்படுகிறார். பின் விஜயா மீனா தேர்தலில் எல்லாம் நிற்க கூடாது, அவளுக்கு என்ன தகுதி உள்ளது.

இந்த வீட்டிற்கு என்று ஒரு கௌரவம் உள்ளது, அதை கெடுக்க விட மாட்டேன். நீ எதிர்ப்பது யார் தெரியுமா, அவரிடம் உள்ள பணம், செல்வாக்கு பற்றி தெரியுமா, உன்னிடம் என்ன உள்ளது என ஏளனமாக பேசுகிறார்.
விஜயாவின் திமிர் பேச்சுக்கு அண்ணாமலை கோபமாக பதிலடி கொடுத்தும் கடைசியில் விஜயா நீ இந்த வீட்டிற்கு மருமகளாக இருக்க வேண்டுமா இல்லையா என்று யோசி என கூறிவிட்டு செல்கிறார். ஆனால் அண்ணாமலை விஜயா பேச்சை விடுமா, நீ தேர்தலில் நில் ஜெயிப்பாய் என கூறிவிட்டு செல்கிறார்.
