கடைக்கு வந்து மனோஜிடம் சிரித்து பேசிக்கொண்டிருந்த ரோஹினி, அதிரடி காட்டிய விஜயா.... சிறகடிக்க ஆசை சீரியல்
சிறகடிக்க ஆசை
அண்ணாமலையின் வீட்டுப் பிரச்சனை எப்போது தான் முடியும் என தெரியவில்லை. மனோஜ்-விஜயா போலி கையெழுத்து போட்டு வீட்டுப் பத்திரத்தை அடமானம் வைத்ததே குடும்பத்திற்கு தாமதமாக தெரியவர பிரச்சனையும் கை மீறி சென்றுவிட்டது.
பைனான்சியரை வருமான வரித்துறை அதிகாரி வைத்து முத்து-மீனா பேசியதில் இந்த வீட்டுப் பத்திர பிரச்சனைகளுக்கு பின்னால் சிந்தாமணி இருப்பது அனைவரும் தெரிய வர ஷாக் ஆனார்கள்.

இன்றைய எபிசோட்
சிந்தாமணி வீட்டிற்கு பார்வதியுடன் விஜயா சென்று செம சண்டை போட்டார். பின் ஸ்ருதி அம்மா வீட்டில் பண பிரச்சனை குறித்து பேசப்படுகிறது. அதாவது ஸ்ருதியின் அப்பா, ரூ. 10 லட்சம் தருகிறேன், ஆனால் நீங்கள் இருவரும் இங்கேயே தான் இருக்க வேண்டும் என கண்டிஷன் போடுகிறார்.

இதைக்கேட்டு ஷாக் ஆன ரவி அது முடியாது என கோபமாக கூறிவிட்டு வருகிறார், ஆனால் ஸ்ருதி இப்போதைக்கு பணம் வாங்கி இங்கே இருப்போம். பின் பணத்தை கொடுத்துவிட்டு நம்ம வீட்டுக்கு சென்றுவிடுவோம் என்கிறார்.
அந்த விஷயத்தை ரவி அண்ணாமலையிடம் கூற அனைவருமே கோபப்படுகிறார்கள்.

அடுத்து நாளைய எபிசோடின் புரொமோவில், ஷோரூமிற்கு மனோஜுடன் பேச ஜாலியாக வருகிறார் ரோஹினி. அதனை கேமராவில் பார்த்த விஜயா மைக் ஆன் செய்து ரோஹினியை மோசமாக திட்டுகிறார்