முத்துவின் போனை எடுக்க வந்த ரோகினி.. சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்த வாரம் நடக்கப்போவது இதுதான்..
சிறகடிக்க ஆசை
சின்னத்திரையில் தற்போது பட்டையை கிளப்பிக்கொண்டிருக்கும் சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் தற்போது முத்துவிடம் இருக்கும் ஆதாரம் ஒன்றை அனைவருக்கும் வெளிச்சம்போட்டு காட்ட வேண்டும் என சிட்டி முயற்சி செய்து வருகிறார்.
அதற்கு ரோகினியை பகடைக்காயாக பயன்படுத்தியுள்ளார். முத்துவின் போனில் மீனாவின் தம்பி குறித்தும் இருக்கும் ரகசியத்தை அனைவருக்கும் தெரியப்படுத்திவிட்டால், ரோகினியை தொந்தரவு செய்பவரை பார்த்துக்கொள்வதாக சிட்டி கூறியிருந்தார்.

Cwc 5 பிரச்சனைக்கு பிறகு சூப்பர் ஊருக்கு சென்று மணிமேகலை சொன்ன விஷயம்... எங்கே சென்றார், விஷயம் என்ன?
இதனால் முத்துவின் போனில் இருக்கும் விஷயத்தை வெளிக்கொண்டுவர ரோகினி முயற்சி செய்துகொண்டு இருக்கிறார். இந்த நிலையில் இன்றைய எபிசோடின் இறுதியில் அடுத்த வாரம் என்ன நடக்கப்போகிறது என்பது குறித்து ப்ரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
அடுத்த வாரம்
இந்த ப்ரோமோவில், தூங்கி எழுந்த முத்து தனது படுக்கையிலேயே தன் செல்போனை விட்டு செல்கிறார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, முத்துவின் செல்போனை எடுக்க முயற்சிக்கிறார் ரோகினி. ஆனால், அந்த சமயத்தில் திடீரென முத்து அங்கே மீனாவை தேடி வர, உடனடியாக அங்கிருந்து நகர்ந்துவிடுகிறார் ரோகினி.
இதன்பின் என்ன நடக்கப்போகிறது என்று அடுத்தவாரம் எபிசோடில் தான் தெரியும். பொறுத்திருந்து பார்ப்போம், முத்துவிடம் இருக்கும் ஆதாரத்தை ரோகினி வெளிக்கொண்டு வருகிறாரா என்று.

37,000 அடியில் பறந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம்: நிர்வாணமாக நடனமாடிய ஊழியரால் பரபரப்பு News Lankasri

மற்றொரு ஐரோப்பிய நாடு... 10,000 ரஷ்ய வீரர்கள்: பிரதமர் ஒருவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் News Lankasri
