வீட்டிற்கு வந்த ரோஹினியை அடித்து வெளுத்த விஜயா, பாட்டி செய்த காரியம்... அடுத்தவார சிறகடிக்க ஆசை பரபரப்பு புரொமோ
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை சீரியலில் ரோஹினி மாமா என்று யாரையோ கூறி ஏமாற்றிய விஷயம் வீட்டிற்கு தெரிந்துவிட்டது.
இதனால் விஜயா, ரோஹினியின் தலையை பிடித்து இழுத்து வீட்டைவிட்டு வெளியே அனுப்பிவிட்டார். ரோஹினி, வித்யா வீட்டிற்கு செல்ல விஜயா பார்வதி வீட்டிற்கு போக மனோஜ் பாருக்கு சென்றுவிட்டார்.
இப்படி வீட்டில் ஒவ்வொருவரும் ஒரு இடத்தில் இருக்க என்ன செய்வது என்று தெரியாமல் அண்ணாமலை அவரது அம்மாவை சந்திக்க முடிவு செய்கிறார்.
புரொமோ
இன்றைய எபிசோட் முடிந்ததும் அடுத்த வாரத்திற்கான புரொமோ வெளியானது. அதில் விஜயா, நான் தானே இவளை கூட்டிட்டு வந்தேன் நானே வெளுக்கிறேன் என அடிக்கிறார்.
பின் பாட்டி இனி இந்த குடும்பத்திற்கு ஏற்ற மருமகளாக உண்மையாக வாழ்வேன் என சத்தியம் செய்ய கூறுகிறார். அண்ணாமலை இனி நாங்கள் தெரிந்துகொள்ள இன்னும் ஏதாவது உள்ளதா இல்லை ஏதாவது மறைக்கிறாரா என கேட்கிறார்.
முழு உண்மையை ரோஹினி கூறுவாரா அல்லது என்ன செய்யப்போகிறார் என்பதை அடுத்த வாரம் காண்போம்.