சீதா கல்யாண விஷயத்தில் முத்து திடீரென எடுத்த முடிவு.. சிறகடிக்க ஆசை புரொமோ
சிறகடிக்க ஆசை
சீதா கல்யாணம், ரோஹினி பண பிரச்சனை என 2 விஷயங்கள் சிறகடிக்க ஆசை சீரியலில் பரபரப்பாக ஒடிக் கொண்டிருக்கிறது.
இன்றைய எபிசோடில், சீதா வேலை செய்யும் இடத்திற்கு சென்று முத்து அவருக்கு எப்படிபட்ட கணவன் வேண்டும் என தெளிவாக கேட்கிறார்.
இன்னொரு பக்கம், பண நெருக்கடி காரணமாக ஸ்ருதியின் அம்மா வீட்டிற்கு சென்று அவர்களிடம் பணம் கேட்கிறார்.
ஸ்ருதியின் அப்பா இந்த பண விஷயத்தை வைத்து அண்ணாமலை குடும்பத்தை பிரித்துவிடலாம் என பிளான் செய்கிறார்.

அடுத்த வாரம்
இதுநாள் வரை சீதாவிற்கு அருணை திருமணமே செய்துவைக்க கூடாது என உறுதியாக இருந்த முத்து மனம் மாறுகிறார்.
பின் முத்து, மீனா அம்மா வீட்டிற்கு சென்று சீதாவிடம் அருணை உன்னை பெண் பார்க்க வரச்சொல் என கூற அவர் செம சந்தோஷம் அடைகிறார். இதோ புரொமோ,
பறிபோன மென்பொருள் வேலை... இலங்கையர் எடுத்த முடிவு: இன்று தினசரி ரூ 50,000 கடந்த விற்றுமுதல் News Lankasri