என்னது மனோஜ் இன்னொரு திருமணம் செய்துகொண்டாரா?... சிறகடிக்க ஆசை சீரியலின் வைரல் போட்டோ
சிறகடிக்க ஆசை
விஜய் டிவியில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு டிஆர்பியில் டாப்பில் இருந்துவந்த தொடர் தான் சிறகடிக்க ஆசை.
கதையில் கடந்த சில நாட்களாக அண்ணாமலையின் வீட்டுப் பிரச்சனை பெரியதாக சென்றது. முத்து எப்படியோ பண பிரச்சனையை சரிசெய்து அனைவரையும் மீண்டும் வீட்டிற்கு அழைத்து வந்தார்.
அந்த பிரச்சனை முடிவடைய உடனே சத்யா-ரேகா காதல் பிரச்சனை துவங்கியது.

எபிசோட்
இன்றைய எபிசோடில், சிந்தாமணி மற்றும் அவரது கணவர் ரேகாவை கண்டுபிடிக்கும் யோசனையில் உள்ளனர். கடையில் மனோஜ் தனது வந்த வாய்ப்பை நினைத்து மிகவும் யோசிக்கிறார். அந்த Numerology நபரை கடைக்கு அழைத்து மனோஜ் தனக்கு வந்த திருமண வாய்ப்பு குறித்தும், பண யோகம் குறித்தும் கூறுகிறார்.

அவர் ரோஹினிக்கு உங்களுக்கும் செட் ஆகாது, உங்களது ஜாதகத்தில் இரண்டாவது திருமணத்திற்கான வாய்ப்பு உள்ளது என கூறிவிட்டு செல்கிறார். அதோடு உடனே அந்த புதிய திருமணத்திற்கு ஒப்புக்கொள்ளுங்கள் என்கிறார்.
அந்த நேரம் பார்த்து ரோஹினி ஷோரூம் வருகிறார், எப்போது ரூ. 5 லட்சம் தருவாய், எனக்கு பண தேவை இப்போது உள்ளது. பணம் கொடுத்தால் உடனே விவாகரத்து கொடுத்துவிடுவேன் என கூறுகிறார்.

அப்படியே சாதாரண கதைக்களத்துடன் தொடர் முடிந்தது. இப்போது சிறகடிக்க ஆசை சீரியலின் அடுத்த கதைக்களத்திற்கான ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.
அதாவது மனநலம் பாதிக்கப்பட்டவருக்கு திருமணம் ஆனது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது, அதைப்பார்த்ததும் மனோஜ் அவரை திருமணம் செய்துக்கொண்டாரா?. இந்த கதைக்களத்தை நாங்கள் எதிர்ப்பார்க்கவில்லையே என கமெண்ட் செய்து வருகிறார்கள்.
இதோ அந்த புகைப்படம்,