மீனா வீட்டைவிட்டு வெளியே சென்றதால் முத்துவிற்கு ஏற்பட்ட நிலைமை.. சிறகடிக்க ஆசை எபிசோட்
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை, விஜய் தொலைக்காட்சியில் சீரியல் தொடங்கிய நாள் முதல் டிஆர்பியில் டாப்பில் இருக்கும் தொடர்.
கதையில் பல மாதங்களாக ரசிகர்கள் எதிர்ப்பார்த்த ஒரு விஷயம் நடந்தது, ஆனால் அது வெடிக்கும் என பார்த்தால் அப்படியே புஸ்பானம் போல் பொங்கி முடிந்துவிட்டது.
மீனாவிற்கு ரோஹினி பற்றிய உண்மை தெரிந்து அவர் வெளியே யாரிடமும் சொல்லாமல் மௌனம் காத்து வருகிறார், இது ரசிகர்களுக்கு பெரிய கோபத்தை ஏற்படுத்தியுள்ளது.

எபிசோட்
இன்றைய எபிசோடில், மீனா வீட்டிற்கு சென்று தனது அம்மா, தம்பியிடம் எதுவும் கூறாமல் அங்கேயே தங்கிவிடுகிறார்.
வீட்டிற்கு வந்த முத்துவை இதுதான் வாய்ப்பு என மனோஜ், ரோஹினி, விஜயா தாக்குகிறார்கள். மீனா வீட்டிற்கு வராமல் இருப்பதற்காக தான் ரோஹினி இப்படி செய்கிறார் என முத்து கூறுகிறார், அப்படியே வாக்குவாதம் அதிகமாகிறது.

அண்ணாமலை சாப்பிட்டு போ என கூற இல்லை வேண்டாம் பா, இப்போது தான் என் மனைவி பற்றி பேசாதே என்கிறான், பிறகு என் மனைவி சமையலை சாப்பிடாதே என்பான்.
எனக்கு எதற்கு வம்பு, நான் வெளியில் சாப்பிடுகிறேன் என கிளம்புகிறார். மீனா வெளியே சென்றதற்கான காரணத்தை கண்டுபிடிப்பேன்.
ஆனால் ஒன்று மீனா இருந்தால் தான் எனக்கு இந்த வீட்டில் சாப்பாடு கிடைக்கும் என்பது எனக்கு தெரிகிறது என்று கூறிவிட்டு கிளம்புகிறார்.
மிக மோசமான வீழ்ச்சி... மில்லியன் கணக்கானோர் பாதிக்கப்படலாம்: எச்சரிக்கும் பொருளாதார நிபுணர்கள் News Lankasri