சிறகடிக்க ஆசை சீரியலில் ரோகினியாக நடிக்க நடிகை சல்மா அருண் வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?
சிறகடிக்க ஆசை சல்மா அருண்
சின்னத்திரையில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. கடந்த 2023ஆம் ஆண்டு தொடங்கிய இந்த சீரியல் TRP-யில் இதுவரை டாப்பில் இருந்து வருகிறது.

சிறகடிக்க ஆசை சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்களில் ஒருவர் நடிகை சல்மா அருண். இவர் இந்த சீரியலில் ரோகிணி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மனோஜிடம் இருந்து தனக்கு விவாகரத்து வேண்டாம் என தற்போது போராடி கொண்டிருக்கிறார் ரோகிணி. அந்த ரோலில் தனது வில்லத்தனமான நடிப்பின் மூலம் மிரட்டி வருகிறார். மேலும் இந்த சீரியலில் நடித்ததன் மூலம் இவர் பல விருதுகளையும் வென்று குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சம்பளம்
இந்த நிலையில், சிறகடிக்க ஆசை சீரியலில் நடிக்க, நடிகை சல்மா அருண் வாங்கி வரும் சம்பளம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த சீரியலில் நடிக்க ஒரு நாளைக்கு ரூ. 6,000 முதல் ரூ. 8,000 வரை இவர் சம்பளம் வாங்கி வருகிறாராம்.
