க்ரிஷ் செய்த வேலையால் அருணிடம் வசமாக சிக்கப்போகும் முத்து.. சிறகடிக்க ஆசை புரொமோ
சிறகடிக்க ஆசை
சிறகடிக்க ஆசை, முன்பெல்லாம் அம்மா-மகன், மாமியார்-மருமகள் பிரச்சனையாக சென்றுகொண்டிருந்தது.
இப்போது சீதாவிற்கு திருமணம் ஆனதில் இருந்து அருண்-முத்து சண்டையாக செல்லும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அருணை ரவுடிகள் அடிக்கும் முத்து வந்து காப்பாற்றியதை அருண் அப்படியே மாற்றி சீதாவிடம் கூற பிரச்சனை பெரிதானது.
இதனால் மீனா-சீதா இருவரும் சண்டை போட்டுக் கொண்டனர், இதனால் முத்து மிகவும் வருந்தினார். இன்றைய எபிசோடில், முத்து, அருண் செய்த கேவலமான வேலையை சீதாவிற்கு புரிய வைத்துவிட்டார். வீட்டிற்கு சென்று ஏதேதோ பேசி சீதாவையும் சமாதானம் செய்துவிடுகிறார்.
இன்னொரு பக்கம் க்ரிஷ் பள்ளியில் சிக்கி தவிக்கிறார்.

ஜீவானந்தத்திடம் அடம் பிடிக்கும் பார்கவி, அன்புக்கரசி போட்ட டீல்.. எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பு புரொமோ
புரொமோ
அந்த பள்ளி பிடிக்காமல் வெளியே வந்த க்ரிஷ் எதிர்ப்பாரா விதமாக முத்துவின் கார் பின்னால் படுத்துக்கொள்கிறார், அதனை தெரியாமல் முத்துவும் காரை மூடிவிடுகிறார். பின் அருண் எல்லோரின் காரையும் சோதனை செய்ய அப்போது முத்துவும் அங்கே வருகிறார்.
யாரை ஒருவர் இறந்த உடலை காரில் எடுத்துக்கொண்டு செல்வதாக புகார் வர அருண் மற்ற போலீசார் சோதனை நடத்துகிறார்கள். க்ரிஷ் கார் பின்னால் இருப்பதை பார்த்தால் கண்டிப்பாக அருண், முத்துவை வம்பில் சிக்க வைப்பார் என தெரிகிறது.