இரட்டை வேடங்களில் இயக்குனர் சிவாவின் புதிய படத்தில் நடிகர் சூர்யா; உறுதியான தகவல்!
தமிழில் நடிகர் கார்த்தி நடித்த சிறுத்தை படம் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இயக்குனர் சிறுத்தை சிவா. தெலுங்கு பட ரீமேக் ஆன சிறுத்தை வெளியாகி ரசிகர்ககள் மத்தியில் பெரிதளவு கொண்டாடப்பட்டது.
அதன் பின் சிவா தா அஜித்துடன் கூட்டணி வைத்து அடுத்தடுத்து குடும்பங்கள் கொண்டாடப்படும் படங்களாக வீரம், வேதாளம், விவேகம், விஸ்வாசம் போன்ற படங்களை படைத்தார்.
அதன்பின் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் இணைந்து அண்ணாத்த படம் இயக்கி கடந்த தீபாவளி அன்று படம் வெளியிடப்பட்டு வரப்பேற்பை பெற்றது.
இந்நிலையில் தான் இயக்குனர் சிவா தான் அடுத்ததாக நடிகர் சூர்யாவிற்கு சுவாரஸ்யமான கதை ஒன்றை வைத்திருப்பதாக சமீபத்தில் கூறியிருந்தார்.
அந்த செய்தி தான் இப்பொழுது உறுதியாகியுள்ளது, அதன்படி இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு பிப்ரவரியில் துடங்கப்படும் எனவும் இதில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு பிறகே சூர்யா வெற்றிமாறனின் வாடிவாசல் படத்தில் நடிப்பார் எனவும் கூறப்படுகிறது.