சிவகார்த்திகேயன் அடுத்த பட கதை லீக்! இரண்டு ஹீரோயின்களா?
டிவியில் இருந்து சினிமாவில் களமிறங்கி முன்னணி ஹீரோவாக வளர்ந்து நிற்பவர் சிவகார்திகேயன். அவருக்கு என்றுதனியாக ரசிகர் பட்டாளத்தையும் உருவாக்கி இருக்கிறார். டாக்டர் படத்தின் வெற்றிக்கு பிறகு அவர் கைவசம் டான் மற்றும் அயலான் ஆகிய படங்களை வைத்திருக்கிறார். அவற்றின் மீதும் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.
சிவகார்திகேயன் அடுத்து தெலுங்கு இயக்குனர் அனுதீப் உடன் ஒரு படத்திற்காக கூட்டணி சேர்ந்திருக்கிறார். அந்த படத்தின் அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டது.
இந்நிலையில்இந்த படத்தின் கதை லீக் ஆகி இருக்கிறது. சிவகார்த்திகேயன் இந்த படத்தில் டூரிஸ்ட் கைடாக நடிக்கிறாராம். இந்தியாவுக்கு டூர் வரும் வெளிநாட்டு பெண் ஒருவரை அவர் காதலிப்பது போல தான் கதை இருக்கும் என கூறப்படுகிறது.
மேலும் ராஷ்மிமா மந்தனாவும் இதில் ஹீரோயினாக நடிக்கிறார். அதனால் இந்த படத்தில் இரண்டு ஹீரோயின்கள் இருப்பது உறுதியாகி இருக்கிறது. SK20 என தற்போது அழைக்கப்பட்டு வரும் இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் பாண்டிச்சேரியில் தொடங்க உள்ளது.