வாயோடு வாய் வைத்து ஊதி குரங்கின் உயிரை காப்பாற்றிய நபர்.. பாராட்டி தள்ளிய சிவகார்த்திகேயன்
தெருநாய்கள் கடிதத்தில் நினைவிழந்த குரங்கினை பெரம்பலூரை சேர்ந்த நபர் ஒருவர் வாயோடு வாய் வைத்து ஊதி முதலுதவி சிகிச்சை அளித்து இருக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.
குரங்கு சுயநினைவில்லாமல் இருப்பதை பார்த்த அவர் உடனே இதயம் இருக்கும் நெஞ்சு பகுதியை கைகளை கொண்டு அழுத்துகிறார். அதன் பிறகு வாயோடு வாய் வைத்து ஊதுகிறார். அதன் பிறகு தான் குரங்கு சுயநினைவுக்கு வருகிறது.
இப்படி முதலுதவி செய்து குரங்கின் உயிரை காப்பாற்றிய பிரபு என்ற அந்த நபருக்கு பாராட்டு குவிந்து வருகிறது. அவருக்கு நடிகர் சிவகார்த்திகேயனும் ட்விட்டரில் பாராட்டு தெரிவித்து இருக்கிறார்.
"பிரபு சார் யு ஆர் கிரேட்" என சிவகார்த்திகேயன் பதிவிட்டு உள்ளார்.
Prabhu sir you are great ?❤️ https://t.co/dTcfJNeoTg
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) December 13, 2021