நடிகர் சிவகார்த்திகேயனின் மகளா இது..! நன்றாக வளர்ந்து விட்டாரே
தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவர் நடிகர் சிவகார்த்திகேயன்.
இவருடைய நடிப்பில் தற்போது டாக்டர் படம் உருவாகியுள்ளது. இப்படத்தை தொடர்ந்து தெலுங்கு மற்றும் தமிழில் உருவாகவுள்ள தனது எஸ்.கே. 20 படத்தில் நடிக்கவுள்ளார்.
இதன்பின், கமல் ஹாசன் தயாரிப்பில் உருவாகவுள்ள, எஸ்.கே. 21 படத்தில், ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
நடிகர் சிவகார்த்திகேயனுக்கு கடந்த 2010ஆம் ஆண்டு ஆர்த்தி என்பவருடன் திருமணம் நடந்தது. இந்த தம்பதிக்கு ஆராதனா மற்றும் குகன் தாஸ் என இரு பிள்ளைகள்.
இதில் ஆராதனா, கனா படத்தில் ' வாயாடி பெத்த புள்ள' எனும் பாடலை தனது சிறு வயதில் பாடி அசத்தியுள்ளார்.
இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் பொங்கல் ஸ்பெஷலாக தனது குடும்பத்துடன் இணைந்து புகைப்படம் வெளியிட்டிருந்தார்.
இதில் ஆராதனா, நன்றாக வளர்ந்து இருப்பதை பார்த்த ரசிகர்கள், நம்ம ஆராதனாவா இது மளமளவென வளர்ந்துவிட்டாரே என்று கூறி வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படம்..

அப்போ வெளியே தெரியாத விஷயம்... விஜய் - திரிஷா சர்ச்சை குறித்து ஓபனாக பேசிய வனிதா விஜயகுமார்! Manithan
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri