சிவகார்த்திகேயன் என்னிடம் பேசுவது இல்லை: வருத்தப்பட்ட நடிகர் பிளாக் பாண்டி
நடிகர் சிவகார்த்திகேயன் டிவியில் தொகுப்பாளராக இருந்து அதன் பின் சினிமாவில் நடிகராக களமிறங்கியவர். தற்போது முன்னணி ஹீரோக்களில் ஒருவராக இருந்து வரும் அவருக்கு அதிக அளவில் ரசிகர் பட்டாளமும் இருக்கிறது.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் தன்னுடன் பேசுவதே இல்லை என நடிகர் பிளாக் பாண்டி வருத்தத்துடன் தெரிவித்து இருக்கிறார். ஒரு பிரபல youtube சேனலுக்கு பேட்டி அளித்த அவர் விஜய் டிவியில் ஒன்றாக பணியாற்றியபோது நெருக்கமான நண்பர்களாக இருந்தது பற்றி அவர் பேசி இருக்கிறார்.
நான் அதிக கஷ்டத்தில் இருந்தபோது சிவகார்த்திகேயனின் மானேஜர் பணம் கொடுக்க வந்தார், ஆனால் நான் பணம் வேண்டாம் நடிக்க வாய்ப்பு இருந்தால் கொடுங்கள் என கூறினேன். அதை மேனேஜர் அவரிடம் எப்படி சொன்னார் என தெரியவில்லை. அதன் பிறகு சிவா என்னிடம் பேசுவதே இல்லை.
ஆனால் அதை நினைத்து வருத்தப்படுவது இல்லை என அவர் கூறி இருக்கிறார்.
பல்கலைக்கழக மாணவர்கள் இருவருக்கு நேர்ந்த துயரம்... அறைத் தோழர் மீது கொலைக் குற்றச்சாட்டு News Lankasri
டிரம்ப் கலந்து கொண்ட விருந்தில் துப்பாக்கி சூடு: வெளியான தாக்குதல்தாரியின் பெயர், புகைப்படம் News Lankasri