மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுத்த சிவகார்த்திகேயன்.. மதுரையில் இருந்து சென்னைக்கு வந்தது இதற்குதானா
நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்கள் ஒருவராக வளர்ந்து இருக்கிறார். தற்போது அவர் சேயோன் என்ற படத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
அந்த படத்தின் ஷூட்டிங் மதுரையில் தற்போது நடைபெற்று வரும் நிலையில், இரவு ஷூட்டிங்கை முடித்துவிட்டு அதிகாலையில் வேகமாக மனைவி ஆர்த்தியை பார்ப்பதற்காக சென்னைக்கு திரும்பி இருக்கிறார் சிவகார்த்திகேயன்.

திருமண நாள்
இன்று திருமண நாள் என்பதால் மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுக்க சென்னைக்கு காலையில் வந்த சிவகார்த்திகேயன், கேக் வெட்டி திருமண நாளை கொண்டாடியிருக்கிறார்.
அதற்கு பிறகு மாலையில் மீண்டும் மதுரைக்கு கிளம்பி சென்று படப்பிடிப்பில் மீண்டும் கலந்து கொண்டிருக்கிறார் அவர்.
இந்த விஷயத்தை ஆர்த்தி மிகவும் நெகிழ்ச்சியாக தெரிவித்திருக்கிறார்.

