இன்னும் ஆரம்பிக்கவே இல்ல அதுக்குள்ள பிரச்சனை வந்துருச்சு.. சிவகார்த்திகேயனுக்கு வந்த சோதனை
எஸ்.கே. 23
சிவகார்த்திகேயன் தற்போது இரண்டு திரைப்படங்களில் நடிக்கிறார். ராஜ்குமார் பெரிசாமி இயக்கத்தில் நடித்து கமல் தயாரிப்பில் எஸ்.கே. 21 படமும் ஏ.ஆர். முருகதாஸ் தயாரிப்பில் எஸ்.கே. 23 படத்திலும் நடித்து வருகிறார்.
இதில் எஸ்.கே. 23 படத்தின் பூஜை நேற்று தான் நடைபெற்றது. உடனடியாக முதற்கட்ட படப்பிடிப்பை துவங்கினார்கள். ஆனால், அதற்குள் படத்திற்கு பிரச்சனை வந்துவிட்டது.
பிரச்சனை
இப்படத்திற்காக வெளிமாநில யூனிட்டுகளை பயன்படுத்துவதாக தென்னிந்திய அவுட் டோர் யூனிட் சங்கம் குற்றம்சாட்டியுள்ளார்களாம். ஏற்கனவே நடந்த பேச்சு வாதையை மீறி சிலர் செயல்படுதல் இன்று முதல் எந்த திரைப்படங்களுக்கும், சீரியல்களுக்கும் ஒத்துழைப்பு தரமாட்டோம் என தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
இதற்குமுன் கமல் நடிப்பில் உருவாகி வரும் தக் லைஃப் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்ற போது, இதே குற்றச்சாட்டு எழுந்தது. ஆனால், மூன்று நாட்களுக்கு பயன்படுத்தி கொள்கிறோம் என்று பேச்சு வார்த்தை நடத்தி அதை சுமுகமாக முடித்துள்ளனர். இப்படியொரு நிலையில், மீண்டும் சிவகார்த்திகேயன் படத்திற்கும் இப்படி நடந்துள்ளதால், எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.