திருமண நாளை கோலாகலமாக கொண்டாடிய சினேகா-பிரசன்னா... வெளியிட்ட ஸ்பெஷல் போட்டோஸ்
தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகள் நிஜ வாழ்க்கையில் நிறைய பேர் இணைந்துள்ளார்கள், அப்படி ஒரு ஜோடி தான் சினேகா-பிரசன்னா.
2009ம் ஆண்டு வெளியான அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் இருவரும் கணவன்-மனைவியாக நடித்தனர். அப்போது இருவருக்குள்ளும் இடையே நட்பு ஏற்பட அப்படியே காதலாகவும் மாறியது.
பின் 3 ஆண்டுகள் காதலித்து வந்தவர்கள் தங்களது பெற்றோர்களின் சம்மதத்துடன் 2012ம் ஆண்டு மே மாதம் 11ம் தேதி நடைபெற்றது.
இவர்களுக்கு 2015ம் ஆண்டு விஹான் என்ற மகன் பிறந்தார், பின் 2020ம் ஆண்டு ஆத்யந்தா என்ற பெண் குழந்தை பிறந்தது.

கொண்டாட்டம்
இன்ஸ்டாவில் மிகவும் ஆக்டீவாக இருக்கும் சினேகா-பிரசன்னா இன்று தங்களது திருமண நாளில் ஸ்பெஷல் பதிவு போட்டுள்ளனர்.

அவர்கள் ஒன்றாக எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படங்களை போட்டு 14 வருடம் கடந்துவிட்டது, 15வது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறோம் என பதிவு போட்டுள்ளனர்.