கையில் பாட்டில்.. ஹன்சிகா முதல் திருமண நாளை எப்படி கொண்டாடி இருக்கிறார் பாருங்க
நடிகை ஹன்சிகா கடந்த வருடம் சோஹைல் கத்தூரியா என்பவரை காதல் திருமணம் செய்துகொண்டார். அவர்கள் நிச்சயதார்த்தம் பாரிஸில் நடந்த நிலையில் திருமணம் ஜெய்ப்பூரில் இருக்கும் ஒரு அரண்மனையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.
சோஹைல் கத்தூரியாவுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி விவகாரத்து ஆகிவிட்ட நிலையில் ஹன்சிகா அவருக்கு இரண்டாவது மனைவியாக போவதை நெட்டிசன்கள் கிண்டல் செய்தனர். அதுவும் அவரது முதல் மனைவி ஹன்சிகாவின் தோழி தான், அவர்கள் திருமணத்திற்கு ஹன்சிகா சென்ற வீடியோவும் வைரல் ஆனது.
அந்த சர்ச்சைகளுக்கு எல்லாம் ஹன்சிகா தனது திருமண வீடியோவில் பதிலடி கொடுத்தார். ஹன்சிகாவின் திருமண வீடியோ ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பானது குறிப்பிடத்தக்கது.
முதல் திருமண நாள்
இந்நிலையில் தற்போது முதல் திருமண நாளில் ஹன்சிகாவுக்கு அவரது கணவர் சர்ப்ரைஸ் மேல் சர்ப்ரைஸ் கொடுத்து இருக்கிறார்.
அவர் கையால் எழுதிய 5 கடிதங்களை ஹன்சிகாவிடம் கொடுத்திருக்கிறார். மேலும் கேக் வெட்டி அவர்கள் திருமண நாளை கொண்டாடி இருக்கின்றனர். அது மட்டுமின்றி champagne பாட்டில் உடன் அவர்கள் கொண்டாடி இருக்கும் வீடியோவும் வைரல் ஆகி இருக்கிறது.