பட்டிமன்ற பேச்சாளர் மற்றும் பேராசிரியர் சாலமன் பாப்பையாவின் மனைவி காலமானார்..
சாலமன் பாப்பையா
பட்டிமன்றம் என சொன்னாலே நம் அனைவருக்கும் உடனடியாக நினைவுக்கு வரும் பெயர் சாலமன் பாப்பையா. பட்டிமன்ற பேச்சாளர் மற்றும் பேராசிரியரான சாலமன் பாப்பையா, தமிழில் வெளிவந்த சிவாஜி, பாய்ஸ் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
மனைவி மரணம்
இந்த நிலையில், சாலமன் பாப்பையாவின் மனைவி ஜெயா பாய் (வயது 88) நேற்று காலமானார். சாலமன் பாப்பையா - ஜெயாபாய் தம்பதியருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
வயது மூப்பு காரணமாக உடல்நல குறைவு ஏற்பட்டு, சிகிச்சை பெற்று வந்த இவர், நேற்று காலை மறைந்துள்ளார். மதுரையில் உள்ள இல்லத்தில் அவரது உடலுக்கு, அமைச்சர் தியாகராஜன், எம்.எல்.ஏ தாம்ப்ராஸ் மாநில துணைத் தலைவர் இல.அமுதன் உள்ளிட்ட பிரமுகர்கள் மற்றும் மக்கள் செலுத்தினார்கள்.
மாலையில் இறுதி ஊர்வலம் நடைபெற்ற நிலையில், தத்தனேரி கல்லறை தோட்டத்தில் அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது.

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

புள்ள இறந்ததுக்காக எவனாவது பெருமைப்படுவானா? எந்த பொண்ணுக்கும்.. கண்ணீருடன் பேசிய ரிதன்யாவின் தந்தை News Lankasri
