திருமணத்திற்கு பின் நான் செய்த பெரிய தவறு.. மனம் திறந்த நடிகை சோனியா அகர்வால்
சோனியா அகர்வால்
தமிழ் சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவர் சோனியா அகர்வால். இவர் நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான காதல் கொண்டேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார்.
முதல் படத்திலேயே ரசிகர்கள் மனதில் பாப்புலர் ஆன சோனியா விஜய், சிம்பு என பல நடிகர்களுடன் நடித்துள்ளார்.
படங்களில் பிஸியாக நடித்து வந்த சோனியா அகர்வால் இயக்குநர் செல்வராகவனை காதலித்து பெற்றோர்கள் சம்மதத்துடன் கடந்த 2006ம் ஆண்ட திருமணம் செய்து கொண்டார்.
பின் கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் கடந்த 2012 ஆம் ஆண்டு விவாகரத்து பெற்று பிரிந்தனர்.
ஓபன் டாக்
இந்நிலையில், பேட்டி ஒன்றில் சோனியா பேசிய விஷயம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதில், " நான் வாழ்க்கையில் ஒரு தவறான முடிவு எடுத்துவிட்டேன், அதாவது நான் பீக்கில் இருந்த போது, ஒரு பிரேக் எடுத்துவிட்டேன். திருமணத்திற்கு பின் நான் நடிக்கவில்லை. அது தான் நான் செய்த மிகப்பெரிய தவறு" என்று பேசியுள்ளார்.