தீடீரென தந்தையை நினைத்து மேடையில் அழுத எஸ்.பி.சரண்.. கண்கலங்க வைக்கும் வீடியோ

By Kathick Apr 25, 2022 01:40 PM GMT
Report

எஸ்.பி. பாலசுப்ரமணியம்

திரையுலகில் தனது குரலின் மூலம் பல கோடி ரசிகர்களை தன்வசப்படுத்தியவர் பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம்.

இவர் கடந்த 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 25ஆம் தேதி கொரோனா தாக்கம் காரணமாக காலமானார். இவருடைய மறைவு திரையுலகினர் மட்டுமின்றி உலகளவில் உள்ள பல கோடி ரசிகர்களுக்கும் சோகத்தை கொடுத்தது.

எஸ்.பி.பி மற்றும் அவரது மகன் எஸ்.பி சரண் இருவரும் இணைந்து பல மேடைகளில் பல பாடல்களை ஒன்றாக பாடியுள்ளனர்.

தீடீரென தந்தையை நினைத்து மேடையில் அழுத எஸ்.பி.சரண்.. கண்கலங்க வைக்கும் வீடியோ | Sp Charan Crying In Stage For His Father Spb

கண்கலங்கிய எஸ்.பி. சரண் 

இந்நிலையில், தனது தந்தையின் மரணத்திற்கு பிறகு எஸ்.பி. சரண் மேடை ஒன்றில் 'உன்னைக்காணவில்லையே நேற்றோடு; பாடலை வேறொருவருடன் இணைந்து பாடிக்கொண்டிருந்தார்.

அப்போது உருக்கமான வரி ஒன்றை பாடிய எஸ்.பி. சரண் தீடீரென தனது தந்தையை நினைத்து கண்கலங்கிவிட்டார். அந்த வீடியோ தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது..

இதோ அந்த வீடியோ..

+44 20 3137 6284
UK
+41 315 282 633
Switzerland
+1 437 887 2534
Canada
+33 182 888 604
France
+49 231 2240 1053
Germany
+1 929 588 7806
US
+61 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US