மகள்களை பிரிந்து வாடும் எஸ்.பி.பி. சரண்- கண்ணீர் மல்க நிகழ்ச்சியில் அவரே கூறிய விஷயம்
விஜய் தொலைக்காட்சியில் சூப்பர் சிங்கர் என்ற பாடல் நிகழ்ச்சி பிரபலமாக ஓடிக் கொண்டிருக்கிறது.
அண்மையில் இந்த நிகழ்ச்சி அனு என்ற போட்டியாளர் தனது அப்பாவிற்காக ஒரு பாடலை பாடினார். அதைக்கேட்டு அரங்கமே மெய் சிலிர்த்தனர்.
நடுவராக இருந்த எஸ்.பி.பி சரண் பாடல் குறித்து பேசும்போது, உங்களது அப்பா-மகள் பாசத்தை பார்க்கும் போது அழகாக உள்ளது. நான் என் மகள்களுடன் அப்படி ஒரு உறவை மிஸ் செய்கிறேன் என கண்ணீர் மல்க பேசியுள்ளார்.
காரணம் சரண் தனது முதல் மனைவி ஸ்மிதா என்பவரை விவாகரத்து செய்துவிட்டு அபர்ணா என்பவரை மறுமணம் செய்துகொண்டார்.
முதல் திருமணத்தில் அவருக்கு 2 மகள்கள் பிறந்துள்ளனர், அவர்களை 3 வயதில் பிரிந்தாராம், அதன்பிறகு சந்திக்கவில்லை என கண்ணீர் மல்க வீடியோவில் பேசியுள்ளார்.