எனது அப்பா சொத்தை எல்லாம் அழித்தேனா?- சர்ச்சை குறித்து பேசிய எஸ்.பி.பி. சரண்
கடந்த வருடத்தில் இருந்து இந்த கொரோனா நோய் தொற்றால் பல பிரபலங்களை தமிழ் சினிமா இழந்துள்ளது. அதில் ஒருவர் தான் பாடகர் எஸ்.பி. பாலசுப்ரமணியம் அவர்கள்.
அவரது இழப்பு எல்லோருக்கும் பெரிய சோகத்தை கொடுத்தது. இந்த நேரத்தில் தான் எஸ்.பி. சரண் அவர்கள் அவரது அப்பாவின் சொத்தை எல்லாம் படம் எடுக்கிறேன் என்று கூறி அழித்துவிட்டார் என சர்ச்சை எழும்பியது.
இதுகுறித்து எஸ்.பி. சரண் கூறுகையில், நான் தயாரித்த உன்னை சரணடைந்தேன், மழை, சென்னை 28, ஆரண்ய காண்டம் என படங்கள் சில விருது பெற்றது, மக்களிடம் நல்ல அங்கீகாரம் பெற்றது.
ஆனால் எதற்கும் நான் போட்ட பணம் வரவில்லை, நஷ்டத்திலேயே ஓடியது. அப்பா நஷ்டம் என்பது சாதாரணமானது, வருத்தப்படாதே என்றார். அப்பா கட்டிய கோதண்டபாணி ஸ்டூடியோவிலும் வேலைகள் நடக்கவில்லை.
இதை பார்த்தவர்கள் எஸ்.பி.பி சம்பாதித்த பணத்தை மகன் அழித்துவிட்டான் என்றனர். அதையெல்லாம் கேட்கும் போது கஷ்டமாக இருந்தது, அந்த நேரத்தில் அப்பா-அம்மா ஆதரவாக இருந்தார்கள்.
கச்சேரிகள் தான் பொருளாதார ரீதியாக எங்களுக்கு உதவின. தெலுங்கில் அப்பா தொகுத்து வழங்கிய பாடல் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க முடிவு செய்துள்ளேன், இனி பாடவும் முடிவு செய்துள்ளேன் என கூறியுள்ளார்.