ஸ்ரீகாந்த் வீட்டில் 3 பாக்கெட்டுகள் கண்டுபிடித்த போலீஸ்! சிறையில் அடைப்பு
நடிகர் ஸ்ரீகாந்த் போதை பொருள் வாங்கி பயன்படுத்தியதாக தற்போது கைது செய்யப்பட்டு இருக்கிறார். ஒரு கிராம் 12 ஆயிரம் ரூபாய் என்ற விலையில் அவர் தொடர்ந்து போதை பொருள் வாங்கி பயன்படுத்தி வந்திருக்கிறார்.
சமீபத்தில் கைதான பிரசாத் என்ற ஒருவரிடம் மட்டும் 40 முறை வாங்கிய ஸ்ரீகாந்த் சுமார் 4.72 லட்சம் ரூபாய் அதற்காக கொடுத்திருக்கிறாராம்.
வீட்டில் பாக்கெட் கண்டுபிடிப்பு
ஸ்ரீகாந்த் வீட்டில் சோதனை மேற்கொண்டபோது அவர் பயன்படுத்திய மூன்று கோகைன் பாக்கெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறது. அதில் இருக்கும் அவர் கைரேகையும் போலீஸ் ஆதாரமாக பயன்படுத்த இருக்கிறது.
கைதாகி இருக்கும் ஸ்ரீகாந்த் சென்னை கீழ்ப்பாக்கத்தில் இருக்கும் அரசு மருத்துவமனையில் பரிசோதனைக்கு பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட இருக்கிறார்.