போதைப்பொருள் விவகாரம்.. நடிகர் ஸ்ரீகாந்திடம் போலீசார் விசாரணை
ஸ்ரீகாந்த்
தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவர் ஸ்ரீகாந்த். ரோஜா கூட்டம், போஸ், நண்பன், பூ என பல படங்களில் நடித்துள்ளார். இவர் நடிப்பில் கடைசியாக தினசரி எனும் திரைப்படம் வெளிவந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
போதை பொருள் விவகாரம்
நுங்கம்பாக்கத்தில் உள்ள பார் ஒன்றில் தகராறு ஏற்பட்டது. இந்த வழக்கில் அதிமுக பிரமுகர் பிரசாந்த் என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த நிலையில், பிரசாந்த்திடம் இருந்து ஸ்ரீகாந்த் போதை பொருள் வாங்கியதாக உள்ள தகவலின் அடிப்படையில் ஸ்ரீகாந்திடம் போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசார் விசாரணை நடத்துவதாக தகவல் வெளியாகியுள்ளன.
பிரசாந்திடம் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் ஸ்ரீகாந்த் உண்மையிலேயே பிரசாந்திடம் இருந்து போதைப்பொருளை பெற்றாரா? எதற்காக ஸ்ரீகாந்த் பெயர் பயன்படுத்தப்பட்டது என்பது குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.