அண்ணா என்று சொன்னாலே கண் கலங்குது.. மனம் திறந்த சீரியல் நடிகை சுசித்ரா
அண்ணா சீரியல்
ஜீ தமிழ் தொலைக்காட்சியின் சூப்பர்ஹிட் சீரியல் அண்ணா. மக்களின் பேராதரவோடு ஒளிபரப்பாகி வந்த இந்த சீரியல் கடந்த சில வாரங்களுக்கு முன் முடிவுக்கு வந்தது.

மிர்ச்சி செந்தில் இந்த சீரியலில் கதாநாயகனாக நடித்திருந்தார். இந்த சீரியலின் கதைப்படி இவருக்கு நான்கு தங்கைகள். இதில் ஒரு தங்கையாக நடித்தவர்தான் நடிகை சுசித்ரா. இவர் அண்ணா சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளார்.
சுசித்ரா
அண்ணா சீரியல் நிறைவடைந்துள்ளதை தொடர்ந்து நடிகை சுசித்ரா அளித்த பேட்டி வைரலாகி வருகிறது. இந்த பேட்டியில், அண்ணா சீரியல் குறித்தும் ஹீரோ செந்தில் குறித்தும் அவர் பேசியுள்ளார்.

அவர் கூறியதாவது, "அண்ணா என்று சொன்னாலே கண் கலங்குது. அண்ணா டீமை ரொம்பவே மிஸ் பண்றேன். இன்னைக்கு நான் இந்த இடத்தில இருக்கிறேன் என்றால் அதுக்கு அந்த ஒட்டுமொத்த அண்ணா டீம்தான் காரணம். ஒவ்வொருத்தரும் எனக்கு கத்து கொடுத்திருக்காங்க. சீரியல் முடியும்போது செந்தில் அண்ணா, 'என்னோட நாலு தங்கச்சிகளும் சீக்கிரமே ஹீரோயின் ஆகணும்னு ஆசீர்வாதம் பண்ணினார்" என கூறியுள்ளார்.