சமந்தா அழுதால் நானும் அழுவேன்.. நடிகை சமந்தா குறித்து பேசிய பிரபல இயக்குநர்
சமந்தா
முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. கடந்த சில ஆண்டுகள் நோயால் பாதிக்கப்பட்டிருந்த சமந்தா, பெரிதும் படங்கள் நடிக்கவில்லை. ஆனாலும் கூட அவருடைய முன்னணி நட்சத்திரம் என்கிற அந்தஸ்து கொஞ்சம் கூட திரையுலகில் குறையவில்லை.
தென்னிந்திய சினிமாவில் கலக்கிக்கொண்டிருந்த சமந்தா, தற்போது இந்திய அளவில் பிரபலமாகிவிட்டார். படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என பட்டைய கிளப்பி வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த சிட்டாடல் வெப் சீரிஸ் சுமாரான வரவேற்பை பெற்றது. ஆனால், இவர் நடிப்பை அனைவரும் பாராட்டினார்கள்.
விரைவில் கம் பேக் கொடுக்கவிருக்கும் சமந்தா, அட்லீ - அல்லு அர்ஜுன் திரைப்படத்தில் கதாநாயகியாக நடிக்கவிருக்கிறார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும் ராம் சரண் - சுகுமார் கூட்டணியில் உருவாகவுள்ள திரைப்படத்திலும் சமந்தா நடிக்கப்போவதாக பேச்சு அடிபடுகிறது. ஆனால், இதுகுறித்து இதுவரை எந்த ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சமந்தா குறித்து பேசிய இயக்குநர்
சமீபத்தில் விருது விழா ஒன்றில் சமந்தா கலந்துகொண்டார். அந்த விருது விழாவின் மேடையில் இயக்குநர் சுதா கொங்கரா நடிகை சமந்தா குறித்து பேசிய விஷயம் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
இதில் "நான் சமந்தாவின் மிகப்பெரிய ரசிகை. கடந்த 5 ஆண்டுகளாக அவருடன் Touch-ல் இருக்கிறேன். அவர் அழுதால் நானும் அழுவேன். சமந்தா எதிர்த்து போராடும் விதம் எனக்கு பலம் தருகிறது. அவள் ஒரு இன்ஸ்பிரேஷன் மற்றும் எனக்கு சமந்தாவின் ஊ அண்ட்டாவா பாடல் மிகவும் பிடிக்கும்" என கூறியுள்ளார்.
பின், சுதா கொங்கரா இயக்கத்தில் சமந்தாவை எப்போது பார்க்கப்போகிறோம் என தொகுப்பாளினி கேட்க. "கண்டிப்பா நான் சமந்தாவுடன் இணைந்து படம் பண்ணவேன்" என சுதா கொங்கரா கூற, அருகில் இருந்த சமந்தா, "எனக்கு ஆக்ஷன் படம் பண்ணவேண்டும்" என கூறினார்.