இதுவரை தமிழ் சினிமாவில் எந்த இயக்குனரும் தொடாத கதை.. இயக்குனர் சுதா கொங்கராவின் அடுத்த அதிரடி
இயக்குனர் சுதா கொங்கரா
தமிழ் திரையுலகில் தனக்கென்று தனி இடத்தை தனது படங்களின் மூலம் சம்பாதித்துக்கொண்டவர் இயக்குனர் சுதா கொங்கரா.
இவருடைய இயக்கத்தில் வெளிவந்த இறுதி சுற்று, சூரரைப்போற்று ஆகிய படங்கள் ப்ளாக் பஸ்டர் ஆகின.
இதனை தொடர்ந்து தற்போது ஹிந்தியில் உருவாகி வரும் சூரரைப்போற்று படத்தின் ரீமேக்கை இயக்கி வருகிறார் சுதா.
இவருடைய இயக்கத்தில் அடுத்ததாக சூர்யா நடிக்கவுள்ளார் என்று ஏற்கனவே அவரே கூறியிருந்தார்.
யாரும் தொடாத கதை
இந்நிலையில், சூர்யாவுடன் படம் பண்ணுவதற்கு முன், புதிதாக ஒரு கதைக்களத்தில்படத்தை இயக்கவுள்ளார். ஆம், சுதந்திரத்திற்கு முன் பெண்கள் யாருக்கும் மருத்துவத்தை பற்றிய அறிவு இல்லை.
இதனால், அவர்கள் மருத்துவத்தில் சேரக்கூடாது கூறப்பட்டது. இதனை எதிர்த்து பெண்களும் மருத்துவர்கள் ஆவார்கள் என்று சாதித்து காட்டிய பெண்ணின் கதையை இயக்கவுள்ளாராம் சுதா கொங்கரா.
இதுவரை தமிழ் சினிமாவில் யாரும் தொடாத கதைக்களத்தை தேர்ந்தெடுத்துள்ளார் சுதா என்பது குறிப்பிடத்தக்கது.