சீரியலில் இருந்து வெளியேறிய சஞ்சீவ் கயல் சீரியலுக்காக வாங்கிய சம்பளம்... எவ்வளவு தெரியுமா?
கயல் சீரியல்
சன் தொலைக்காட்சியில் கடந்த 2021ம் ஆண்டு புதிய ஜோடி இணைய தொடங்கப்பட்ட சீரியல் தான் கயல்.
அப்பாவை இழந்த தனது குடும்பத்தை அவரது இடத்தில் இருந்து பார்த்துக்கொள்ள வேண்டும் என குடும்பத்தின் சுமையை தனது தோளில் சுமப்பவர் தான் கயல்.

குடும்ப பாதுகாப்போடு எழில் என்பவரை காதலித்து திருமணம் செய்தவர் அவரையும் திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். இடையில் ஆனந்தியின் திருமணத்தின் போது எழிலுக்கும்-கயலுக்கும் கொஞ்சம் பிரச்சனை இப்போது கதையே சோகமாக செல்கிறது.
மண்டபத்தில் இருந்து வெளியேறிய எழிலை பாலுவின் நண்பர்கள் மோசமாக அடிக்க இப்போது மருத்துவமனையில் இருக்கிறார். கயலும் எழிலை எங்கெங்கோ தேடுகிறார், ஆனால் இன்னும் கண்டுபிடிக்க முடியவில்லை.

சம்பளம்
பரபரப்பின் உச்சமாக கதைக்களம் அமைந்து வரும் கயல் சீரியலின் டிஆர்பி டாப்பில் இருக்கிறது.
இந்த நேரத்தில் கயல் சீரியலில் நாயகனாக நடித்துவரும் சஞ்சீவ் தொடரில் இருந்து விலகிவிட்டார் என தகவல்கள் வலம் வருகின்றன.
கயல் சீரியலில் இருந்து விலகியுள்ள சஞ்சீவ் இந்த சீரியலுக்காக ஒரு நாளைக்கு இவர் ரூ. 20,000 முதல் ரூ. 25,000 வரை சம்பளம் பெற்றுள்ளார் என கூறப்படுகிறது.
